fbpx

தூக்கத்தில் தண்ணீரில் மூழ்குவதுபோல் கனவு வருதா..? இதற்கு என்ன பலன் தெரியுமா..? அதிர்ஷ்டம் தான்..!!

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியம். அப்படி தூங்கும் போது வரும் கனவுகளில் நல்லதும் இருக்கலாம் கெட்டதும் இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது. கெட்டது நடப்பது போலவும் வரலாம். ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.

கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கும். அந்தவகையில், தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாக தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் நீங்கள் பெரும்பாலும் அபசுகுணம் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அது தவறு. ஏனென்றால் நீர் என்பது பஞ்சபூதங்களில் ஒன்றாகும்.

அது நன்மை விளைவிக்க கூடிய கனவாகும். எனவே தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை நிம்மதியாக மாறும். தொழில் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும், வாழ்க்கையை ரீதியாகவும் தனிப்பட்ட விஷயங்களிலும் அனைத்திலும் இருந்த தீய பலன்கள் அனைத்தும் விலகி இனிவரும் காலங்களில் சிறப்பான வாழ்க்கை அமையப் போகிறது என்பதை உணர்த்துவதாகவே இந்த கனவு இருக்கிறது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்வு..!! அரசின் அறிவிப்பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!!

Wed Dec 13 , 2023
தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 44 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் எருமை பாலின் கொள்முதல் விலை, இனி 47 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே, 35 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை 38 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது, டிசம்பர் […]

You May Like