fbpx

”மக்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கு இருக்கா”..? ”அப்படினா எம்எல்ஏ சீட் கன்பார்ம்”..!! முதல்வர் அதிரடி..!!

ஆந்திரா மாநிலத்தில் தங்கள் பகுதியில் உள்ள மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களுக்கு மட்டுமே எம்பி, எம்எல்ஏ தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளர்.

ஆந்திர மாநிலத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், எம்.எல்.ஏக்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ”ஆந்திர மாநிலத்திற்கு மீண்டும் முதல்வர் நாற்காலிக்கு ஜெகன் மோகன் ரெட்டி ஏன் தேவை என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும், மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை தங்கள் பகுதிகளில் நடத்தவும் கேட்டுக் கொண்டார்.

ஆந்திர சட்டப் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடர் முடிந்தவுடன், விரைவில் மக்களிடம் இது குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், வரும் தேர்தலில் சில எம்.எல்.ஏ.க்களுக்கு சீட்டு வழங்க முடியாது. ஆனால், அவர்களுக்கு தகுந்த பொறுப்புகள் வழங்கப்படும். நான் எடுக்கும் இந்த முடிவை அனைவரும் வரவேற்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அடுத்த 2 மாதங்களில் மக்கள் மத்தியில் பேச வேண்டும்.

இந்நிலையில், வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வேறு எந்த முடிவுக்கும் வரக்கூடாது என தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தி அடையக் கூடாது எனவும், ஆட்சி அமைந்தபின் உரிய அங்கீகாரம் அமைத்து தரப்படும் எனவும் உறுதி அளித்தார்.

Chella

Next Post

BEL நிறுவனத்தில், மாதம் 30,000 ரூபாய் ஊதியத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு....! உடனே விண்ணப்பியுங்கள்.....!

Thu Sep 28 , 2023
நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறோம். ஆகவே, நம்முடைய செய்தி நிறுவனத்தை பின் தொடர்ந்து, இதில் வெளியாகும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை பார்த்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தெரிந்து கொண்டு பயன்பெறலாம். அந்த வகையில், இன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், visiting medical officer […]

You May Like