நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும்.
இந்த பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு ஒன்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதாவது, தனி நபர் வருமான வரி உச்ச வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்தி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வருமான வரிக்கான புதிய வரி முறைப்படி, ரூ.12 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை. இதனால், மாத ஊதியம் ரூ.1 லட்சம் வரை பெறுபவர்கள் இனி வரி செலுத்த தேவை இருக்காது.
கடந்த 2023ஆம் ஆண்டில் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி உச்சவரம்பு, தற்போது ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சலுகையாக இருக்கும். இனி மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்குப் பெறுவார்கள்.
வருமானம் – வரி விகிதம்
➥ ரூ.4 லட்சம் வரை – வரி இல்லை
➥ ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – 5%
➥ ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை – 10%
➥ ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை – 15%
➥ ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை – 20%
➥ ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை – 25%
➥ ரூ.24 லட்சத்திற்கு மேல் – 30%
Read More : BIG BREAKING | மின்சார வாகனங்கள், செல்போன்களின் விலை குறைகிறது..!! நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!!