fbpx

விஜயகாந்தை அடக்கம் செய்யப்படும் சந்தனப்பேழையில் இடம்பெற்றுள்ள வாசகம் என்ன தெரியுமா..?

கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். கோயம்பேட்டிலும் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்துள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், விஜயகாந்த் அடக்கம் செய்யப்படும் சந்தனப்பேழையில் “புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. நிறுவனத் தலைவர் தேமுதிக எனவும் விஜயகாந்தின் பிறப்பு, இறப்பு தேதிகளும் சந்தனப்பேழையில் இடம்பெற்றுள்ளன.

Chella

Next Post

தனது மரணத்தை 40 நிமிடங்கள் உணர்ந்த பெண்..!! உடலில் வினோதமான தோற்றங்களைப் பார்த்ததாக பேட்டி..!!

Fri Dec 29 , 2023
இங்கிலாந்தின் நார்த் யார்க்ஷயரின் ஸ்கார்பரோவைச் சேர்ந்தவர் கிர்ஸ்டி போர்டோஃப்ட். 3 குழந்தைகளின் தாயான இவர், சமீபத்தில் தனது பாட்னர் ஸ்டூவுடன் வீட்டில் டின்னருக்கு பிளான் போட்டிருந்தார். ஆனால், சில மணி நேரத்திற்குப் பிறகு, அவர் சோபாவில் உயிரற்ற உடலாகக் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மருத்துவர் அழைக்கப்பட்டனர். மருத்துவர்கள் தீவிர முயற்சி எடுத்த போதிலும் அவரை முதலில் காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்து டாக்டர்கள் முயன்ற நிலையில், சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவர்கள் […]

You May Like