இந்தி மொழியில் வெளியாகும் க்ரோர்பதி நிகழ்ச்சியில் அமித்தாபச்சன் மனைவி ஜெயாவுடன் ஏற்பட்ட காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
மும்பையில் வசித்து வரும் அமித்தாப் பச்சன் 1969ல் குரல் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் நடிகராக அறிமுகமானார். திரைப்படத்தில் நடித்துக்கொண்டே நடிகை ஜெயபாதுரியை 1973ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஒருபக்கம் ஜெயபாதுரியும் சினிமா துறையில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்தார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து ஜெயபாதுரி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இவர்களுக்கு ஸ்வேதா பச்சன், அபிஷேக் பச்சன் பிறந்தனர். சமீபத்திய காலங்களில் பிரபலங்கள் இணைந்து திருமணம் செய்து கொண்டு 5 வருடம் 6 வருடம் வாழ்ந்துவிட்டு விவகாரத்து என வந்துவிடுகின்றனர். அதுவும் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகவும் சகஜம் என கூறலாம்.
ஆனால், அமித்தாப்பச்சன்-ஜெயா பச்சன் தம்பதி தங்கள் நெறியில் இருந்து தவறாது கண்ணியத்துடன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இவர்கள் மிகச் சிறந்த ஜோடியாக கருதப்படுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கோன் பனேகா க்ரோர்பதி என்ற நிகழ்ச்சியில் அவர் போட்டியாளர் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஜெயாபச்சன் உடனான அழகான காதல் கதையை பகிர்ந்திருக்கின்றார்.
தான், ஜெயபச்சனின் அழகிய கூந்தலை பார்த்து மயங்கி காதலில் விழுந்தததாக தெரிவித்துள்ளார். இது பற்றிய ப்ரோமோ வைரலாகி வருகின்றது. அந்த ப்ரோமோவில், ’’ ப்ரியங்கா, நாங்கள் பொதுவாக போட்டியாளர்களிடம் அவர்கள் என்ன செய்து கொண்டிரக்கின்றார்கள் என்பதை பற்றி கேட்போம் நீங்களும் இது பற்றி கூறுங்கள்… என கேட்கின்றார். பதிலுக்கு, ’’ நான் அழகு கலை நிறுவனத்தில் மேலாளராக உள்ளேன்.’’ என பதில் அளிக்கின்றார். உடனடியாக அமித்தாப், மேம் உங்களுக்கு இந்த கூந்தல் மிகவும் அழகாக உள்ளது என்கின்றார்.. இதற்கு எதிர்புறத்தில் நன்றி சாப் என தெரிவிக்கின்றார். உடனே அமித்தாப் ஒரு காமெடி கூறுவது போல என் மனைவி ஜெயாவுக்கும் மிக நீளமான கூந்தல், நான் என் மனைவியை காதலித்தது கூட அவர் கூந்தல் அழகில் மயங்கிதான்’’ என கூறினார். இதைக் கேட்டதும் அரங்கில் அனைவரும் சிரிக்கின்றனர்.
ஆனால், அமித்தாப் கூறியதைப் போல பெங்காலி படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஜெயபாதுரிக்கு மிகவும் நீளமான கூந்தல் இருக்கும். இருவரும்சேர்ந்து குட்டி, ஏக் நாசர்போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதனால் இருவருக்கும் காதல் மலர்ந்து இணை பிரியா தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.