fbpx

முருகனின் இந்த படைவீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பதில்லை ஏன் தெரியுமா?… பெயரிலே பதில் இருக்கு!

உலகெங்கும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சூரசம்ஹாரம் நடைபெறுவது முக்கிய நிகழ்வு. ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹார விழா நடப்பது கிடையாது. வாருங்கள் அதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம். தேவர்களையும் முனிவர்களையும் சூரபத்மன் என்னும் அசுரன் மிகவும் கொடுமைப்படுத்தினான். ஈசனிடம் பல அற்புத வரங்களை பெற்றதால் அவனை யாராலும் அழிக்க முடியவில்லை ஈசன் தன் நெற்றிக்கண் சுடர் மூலம் முருகனை அவதரிக்க செய்து சூரபத்மனின் அழிவிற்கு வித்திட்டார்.

சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப்பெருமானின் சீற்றம் முழுவதும் தணிந்த பின் அமர்ந்த மலையே திருத்தணி என்று புராணங்கள் கூறுகிறது. ஆகையால் மற்ற கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றாலும் இங்கு முருகனின் சீற்றத்தை தணிக்க புஷ்பாஞ்சலி நடைபெறுவது வழக்கம். சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோவில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது.

தேவர்களின் துயர் துடைத்ததோடு அடியவர்களின் கவலையையும், துன்பத்தையும் தணிக்கும் தலம் இது என்பதால் திருத்தணி என்று பெயர் பெயர்பெற்றதாக கூறப்படுகிறது. திருத்தணி மலை நோக்கி சென்றாலோ, திருத்தணி முருகனை நினைத்தாலோ, திருத்தணி மலை இருக்கும் திசை நோக்கி வாங்கினாலோ முருகப்பெருமானின் அருள் கிடைக்கும் தணிகை புராணம்.

Kokila

Next Post

பாஜகவில் இணைந்தாரா ஓபிஎஸ்?… காவி வேட்டியில் பேரவைக்கு வந்து ட்விஸ்ட்!… தமிழக அரசியலில் பரபரப்பு!

Sun Nov 19 , 2023
பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாத மசோதாக்கள் தொடர்பாக தனித் தீர்மானங்களும் அவையில் நிறைவேற்றப்பட்டன. சட்டமன்ற விவகாரம் இப்படி ஒருபுறம் இருக்க, முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் எனும் கேள்வி இருந்து வந்தது. அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்துவது தொடர்பாக வழக்கும் நடந்து வருவதால் சட்டமன்றத்துக்கு அவர் என்ன உடை அணிந்து வருவார் எனவும் எதிர்பார்ப்பு […]

You May Like