fbpx

ஜீரணம் ஆகாமல் அவதிப்படுகிறீர்களா?… சாப்பிடும்போதே கட்டாயம் இதை பண்ணுங்கள்!…

செரிமானத்தை சிக்கலாக்கும் உணவுகளை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும். எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக்கும். இவையெல்லாம் பூஜ்ஜிய ஊட்டச்சத்து கொண்டவை. இவை சரியாக ஜீரணம் ஆவதும் இல்லை. இதில் காணப்படும் தேவையற்ற சேர்மானங்கள் குடலையும் எரிச்சலூட்டும். வயிற்றுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை வாயு, வீக்கம் மற்றும் பிடிப்புகள் ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன. வறுத்த உணவுகள் செரிமான செயல்முறையை முற்றிலும் பாதிக்கின்றன. அவை உடல் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நார்ச்சத்து இல்லாததால் செரிக்கவும் கடினமாகவும் இருக்கும். காரமான உணவுகள் செரிமான அமைப்பைத் தூண்ட உதவுகின்றன. ஆனால் அதுவே அதிக அளவில் சாப்பிட்டால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். வாயு, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை எதிர்விளைவு, வயிற்று வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

செயற்கை இனிப்புகள் வயிற்றுக்குள் எரிச்சலை உண்டாக்கும். சூயிங்கம் மற்றும் டயட் உணவுகளில் சேர்க்கப்படும், சர்பிடால், மிகவும் பொதுவான இனிப்பு. இவை வாயு, வீக்கம், வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஆல்கஹால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனால் செரிமானம் உட்பட பல நோய்களை ஏற்படுகின்றன. காபி காஸ்ட்ரின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இரைப்பை அமில சுரப்பை ஏற்படுத்துகிறது. இவை அதிக அளவில் குடித்தால் செரிமான பிரச்சனைகள் வரும். சோளத்தில் புரதம் நிறைந்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதை அதிகமாக சாப்பிடுவது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அதிக அளவில் மிளகுக்கீரை உட்கொள்வது கடுமையான நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். இது உங்கள் தசைகளை தளர்த்துகிறது.பால் பொருட்களில் லாக்டோஸ் இருப்பதால் ஜீரணிக்க கடினமாக உள்ளது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத பலருக்கு கடுமையான வாயு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. இந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ளாமல் தவிர்ப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

Kokila

Next Post

தமிழகத்தில் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை!.... தற்கொலை சம்பவங்களை தடுக்க அரசு அதிரடி!

Sun Mar 12 , 2023
தற்கொலை சம்பவங்களை குறைக்கும் வகையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரமாகத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அளித்த பரிந்துரையின் பேரில் அதிக நச்சுத் தன்மை வாய்ந்த மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ், சைபர்மெத்ரின் மற்றும் குளோர்பைரிபாஸ் ஆகிய ஆறு பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு, 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு ஏற்கனவே 60 நாட்களுக்குத் தடை செய்து தமிழக […]

You May Like