fbpx

நீங்கள் வாசனை மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துகிறீர்களா?. வெளியாகும் நச்சுத் துகள்களால் ஆபத்து!.

Scented candles: முந்தைய காலங்களில் இருள் நீக்கி ஒளி பெறுவதற்கு நமது முன்னோர்கள் மரங்களை உபயோகித்தனர். அந்த மரங்களை கொண்டு அதில் இருந்து குச்சிகளை பிரித்து எடுத்து கொள்வர். பின்பு அந்த குச்சிகளின் மேல் முனையில் காய்ந்த தென்னை நார் மற்றும் கயிர் போன்றவற்றை கட்டி , அந்த முனையில் எண்ணெயை தடவி வைத்திருப்பர். பின் அந்த குச்சிகளில் தீ பற்ற வைத்து, தீ பந்தங்கள் உருவாக்கி இருள் சூழ்ந்த இடங்களில் ஒளி ஏற்றுவர்.

வீடு , கோவில் போன்ற இடங்களில் ஒளி ஏற்ற விளக்குகளை உபயோகித்தனர். இந்த விளக்குகள் முதலில் மண்ணால் உருவாக்கப் பட்டன. மண்ணால் உருவாக்கப் பட்ட விளக்குகளில் பஞ்சால் திரி செய்து அதில் வைத்து அதன் மேல் எண்ணெய் ஊற்றி நெருப்பை பற்ற வைத்து ஒளி கூட்டுவர்.

மேற்கத்தைய தாக்கத்தில் விளக்கிற்கு மாற்றாக நமக்கு கிடைத்த ஒரு ஒளி ஏற்றி, மெழுகுவர்த்தி. மெழுகுவர்த்தியை எளிதான உபயோகிக்கும் முறை அனைவரையும் அதனுடன் ஈர்த்தது. எண்ணெய் விளக்கில், விளக்கை எடுத்து, அதற்கு திரி வைத்து, எண்ணெய் ஊற்றி பிறகு நெருப்பு பற்ற வைக்க வேண்டும். மேலும் அதில் எண்ணெய் சிந்தும், நமது கைகளில் எண்ணெய் ஒட்டிக் கொள்ளும் என்பது போன்ற சில விஷயங்கள் அசௌகிரியங்களாய் பார்க்கப் பட்ட நிலையில், மெழுகு வர்த்திகளின் வரவு ஒரு சிறந்த மாற்றாக பார்க்கப் பட்டது.

கால மாற்றத்தில், மெழுகுவர்த்திகள் இருளை விலக்க மட்டும் அல்ல, ஒரு அலங்கார பொருளாகவும் பயன்படுத்த பட்டது. பிறந்த நாளில் கேக் வெட்டும்போது மெழுகுவர்த்தியை அணைத்து கொண்டாடுவது தற்கால நடைமுறை ஆகிவிட்டது. பல பெரிய உணவகங்களில் கூட இரவில் ஒளிரும் மெழுகுவர்த்திகளை அலங்கார பொருளாக பயன்படுத்துகிறார்கள். கேண்டில் லைட் டின்னர் என்ற வார்த்தையை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.

இப்படி தான் ​அழகான வாசனை தரும் மெழுகுவர்த்திகளும் சந்தையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. வாசனை தரும் மெழுகுவர்த்திகள் நமது உடல் நலத்திற்கு நல்லது அல்ல என அறிய படுகிறது. அவை ஒளிர்கையில் காற்றில் தூசி மற்றும் பூஞ்சைகளை கலந்து, அதனை நாம் சுவாசிப்பதன் மூலமாக நமது நுரையீரல்களுக்குள் செல்லும் ஆபத்து இருக்கிறது.

இந்தநிலையில், ACS இன் சுற்றுச்சூழல் அறிவியல் & தொழில்நுட்ப கடிதங்களில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், வாசனை மெழுகுவர்த்தியில் இருந்து வெளியாகும் நறுமண கலவைகள் உட்புற காற்றில் உள்ள ஓசோனுடன் வினைபுரிந்து நச்சுத் துகள்களை உருவாக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. பாரம்பரிய மெழுகுவர்த்திகளை விட வாசனை மெழுகு உருகுவது காற்றில் பரவும் அதிக வாசனை சேர்மங்களை வெளியிடுகிறது என்பதை முந்தைய ஆய்வுகள் காட்டுகின்றன. புதிய ஆய்வின்படி, மெழுகை நேரடியாக சூடாக்குவது அதன் மேற்பரப்புப் பகுதியை அதிகரிக்கிறது, இது ஹைட்ரோகார்பன்களால் ஆன ஆவியாகும் கரிம சேர்மங்கள் (VOCs) போன்ற அதிக நறுமணத்தை காற்றில் வெளியிடுகிறது.

இந்த இரசாயனங்கள் காற்றில் உள்ள மற்ற சேர்மங்களுடன் வினைபுரிந்து நானோமீட்டர் அகலமுள்ள துகள்களை உருவாக்க முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவை உள்ளிழுக்கப்படும்போது எதிர்மறையான உடல்நல பாதிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மெழுகு-உருகும் பயன்பாட்டின் போது நானோ துகள்கள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை.

அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுஸ்ரத் ஜங் ஆராய்ச்சியாளர் குழு, வீட்டிற்குள் காற்று மாசுபடுதளுக்கு பங்களிக்கும் பல்வேறு காரணிகளை ஆராய முனைந்தனர். அதன்படி, வீட்டில், வாசனை இல்லாத மற்றும் வாசனையுள்ள (எலுமிச்சை, பப்பாளி, டேன்ஜரின் மற்றும் மிளகுக்கீரை) 15 வணிக ரீதியாகக் கிடைக்கும் மெழுகுவர்த்திகளை எரியவிட்டு ஆராய்ச்சியாளர்கள் சோதனைகளை நடத்தினர். 2 மணி நேரம் மெழுகு உருகலையடுத்து, அதில் தொலைவில் பரவிய காற்றை சோதனை மேற்கொண்டனர் . அதில், 1 முதல் 100 நானோமீட்டர் அகலத்தில் காற்றில் உள்ள நானோ துகள்கள் இருப்பதி கண்டறிந்தனர்.

“இந்தத் துகள்கள் சுவாச திசுக்கள் வழியாகச் சென்று இரத்த ஓட்டத்தில் நுழையும் அளவுக்கு சிறியதாக இருப்பதால், அவை உள்ளிழுக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.இருப்பினும், மணமற்ற மெழுகு உருகலை சூடாக்கிய பிறகு, டெர்பீன் உமிழ்வுகள் அல்லது நானோ துகள்கள் உருவாக்கம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

Readmore: 3 ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பகல்நேர பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும்!. பிரதமர் மோடி உறுதி!.

English Summary

Do you use scented candles? Danger due to the toxic particles released!

Kokila

Next Post

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்!. மீட்புப் பணி தீவிரம்!. ராஜஸ்தானில் தொடரும் சோகம்!.

Mon Feb 24 , 2025
5-year-old boy falls into borewell!. Rescue operation underway!. Tragedy continues in Rajasthan!.

You May Like