fbpx

தொடர்ந்து சிலிண்டர் வேண்டுமா..? வாடிக்கையாளர்களின் கைரேகை பதிவு கட்டாயம்..!! எப்படி செய்வது..?

இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இந்த சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்கியதும், அவர்களது வங்கிக் கணக்கிற்கு மத்திய அரசின் மானியத் தொகை செலுத்தப்படுகிறது. மேலும், ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 41 லட்சம் இலவச பயனாளிகள் என மொத்தம் 2.33 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்காக, அவர்களின் கைவிரல் கைரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கி இருக்கின்றன. இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது எரிவாயு இணைப்புடன் அவர்களது கைரேகையை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். இது தவிர முக பதிவு மூலமாகவும் வாடிக்கையாளர்களின் சரிபார்ப்பு உறுதி செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது ஏஜென்சிக்கு சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும்.

ஏஜென்சிக்கு செல்ல முடியாத மூத்தக் குடிமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் மொபைல் போன் செயலி மூலம் முகம் பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறைக்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் தொடர்ந்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். இதற்காக, வாடிக்கையாளர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அத்துடன், இந்த நடைமுறைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இலவசமாக செய்து தரப்படும்.

மேலும், கைவிரல் பதிவு செய்ய வரும் ஊழியர்கள் மீது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் தங்களது கேஸ் ஏஜென்சி அல்லது எண்ணெய் நிறுவனங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்று தெரிவித்தனர்.

Read More : மீண்டும் அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா..!! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? ஆபத்து..!!

Chella

Next Post

மூடநம்பிக்கையின் உச்சம்…! நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை…! உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர்!!

Thu May 9 , 2024
சத்தீஸ்கர் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை செலுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவுளை நம்புவதும் வணங்குவதும் தவறில்லை. கணிக்கை செலுத்துவதிலும் தவறில்லை. ஆனால், சில மூடநம்பிக்கைகளை அப்படியே கடைபிடிப்பதுதான் தவறு. அப்படியான ஒரு மூடநம்பிக்கை சம்பவம்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம், அஞ்சோரா காவல் சௌக்கி எல்லைக்கு உட்பட்ட தனாட் கிராமத்தில் ராஜேஷ்வர் நிஷாத் […]

You May Like