உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனத் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த நிலையில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டின் சட்டத்தை உறுதி செய்து வெளிவந்துள்ள உச்சநீதி மன்ற தீர்ப்பு சமூக நீதிக்கான நூற்றாண்டு கால் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் கூறி வருகின்றன. ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எனும் சமூக அநீதியை எதிர்த்து போராட முன்வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு கொடுத்திருக்கிறார்.
ஆனால், 2005-06ல், காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட மேஜர் சின்ஹோ குழுவானது 2010-ம் ஆண்டு அளித்த பரிந்துரையின் அடிப்பைடையில் தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது என்றும், இன்றைய உச்சநீதி மன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக வரவேற்பதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இந்த சட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் முழுமையாக ஆதரித்ததோடு, கேரளாவில் அதை அமல்படுத்தியும் உள்ளது. அதேபோல கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.