போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து பேசும் முதல்வா் மு.க.ஸ்டாலின், முதலில் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”போதைப்பொருள் நடமாட்டத்துக்கு துணை செல்வோா் மீது நடவடிக்கை எடுக்க சா்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா். போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளையும் விரிவாக முதல்வா் கூறியுள்ளாா். ஆனால், முதல்வருக்கு மதுபானம்தான் அதிக போதை தருகிறது என்பதை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதுதான் வருத்தமாக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போதைக்கு அடிமையானவா்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால் மதுபானத்துக்கு அடிமையானவா்கள் எண்ணிக்கை தான் மிக அதிகம் என்றும் முதல்வா் குறிப்பிட்ட கொலை, கொள்ளை, பாலியல் தொல்லைகள் ஆகியவற்றுக்கு மூலக்காரணமே மதுபானம் தான் என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமிழக அரசின் மதுபானக் கடைகளை மூடும் முடிவை முதலமைச்சர் முக.ஸ்டாலின் உடனடியாக எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.