fbpx

மக்கள் அதிகம் பயன்படுத்தும் Dolo 650 நிறுவனம் செய்த பலே மோசடி..! ரூ.1000 கோடிக்கு பரிசு பொருள்..!

விற்பனையை அதிகரிக்க மாத்திரை தயாரிப்பு நிறுவனம் மருத்துவர்களுக்கும், விற்பனை முகவர்களுக்கும் ரூ.1,000 கோடிக்கு பரிசு பொருட்கள் வழங்கியது அம்பலமாகியுள்ளது.

நாட்டில் மொத்தம் 9 மாநிலங்களில் 36 இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் ரூ1.2 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ1.4 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். Dolo 650 மாத்திரைகளை, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலும் பரிந்துரை இல்லாமலும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர். இந்த மாத்திரையை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்துகொண்ட தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது. மோசடியின் மூலம் விற்பனையை அதிகரித்ததுடன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் Dolo 650 நிறுவனம் செய்த பலே மோசடி..! ரூ.1000 கோடிக்கு பரிசு பொருள்..!

இதையடுத்து, கடந்த 6ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 4 நாட்களாக இது தொடர்பாக டோலோ 650 தயாரிப்பு நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடைபெற்றது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனையில் தங்கள் நிறுவனத்தை சேர்ந்த கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக மருத்துவர்களுக்கும், மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் சுமார் ரூ.1,000 கோடிக்கு பரிசு பொருட்களை வழங்கியுள்ளது. டோலோ-650 மட்டும் கொரோனா கோரதாண்டவம் ஆடிய மார்ச் 2020 முதல் 2021 டிசம்பர் வரை ரூ.567 கோடிக்கு விற்பனயாகியுள்ளது.

Chella

Next Post

ஓ.பி.எஸ்-க்கு தொடர்ந்து செக்... மேலும் 18 பேர் கட்சியில் இருந்து கூண்டோடு நீக்கம்...! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி....!

Fri Jul 15 , 2022
வீந்திரநாத், ப.ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவை தடை செய்ய ஓ.பி.எஸ் தரப்பினர் செய்த அனைத்து முயற்சிகளும் எர்கொண்டனர். ஆனால் அது எந்த பலனும் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதனால் […]
விரைவில் சந்திப்பு..!! பொறுத்திருந்து பாருங்கள்..!! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

You May Like