World Leprosy Day: இன்று உலக தொழுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தொழுநோய் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னை தெரசா ஆற்றிய அரும்பணிகள்தான். காரணம், ‘பாவச்செயலின் விளைவால் பிறந்தது தொழுநோய்’ என்று காலங்காலமாக சமுதாயத்தில் கடைபிடிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் தகர்த்தெரிந்துவிட்டு, அவர்களோடு அமர்ந்து அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டு தனது அன்புக்கரம் மூலம் அரவணைத்த உன்னத உள்ளமாக திகழ்ந்தவர் அன்னை தெரசா.
1873-இல் டாக்டர் கெரார்ட் ஹேன்சன் என்பவர்தான் தொழுநோயை உண்டாக்கும் நோயுயிரியை முதலில் கண்டறிந்தவர். அதனாலே, இது ஹேன்சன் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இதனை ஒழிப்பதற்கு என்று 1898 இல் சட்டம் இயற்றப்பட்டது. 1955-இல் இந்திய அரசால் தொழுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் துவங்கப்பட்டது. WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தபடி, தொழுநோய்க்கு பன்மருந்து சிகிச்சை 1982-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, இத்திட்டமானது, NLEP எனப்படும் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டமாக மாற்றப்பட்டது.
2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொழுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அது உண்மைக்கு மாறானது என்று பிறகுதான் தெரியவந்தது. என்னதான் தொழுநோய் ஒழிப்பில் NLEP திட்டத்தின் மூலம் தீவிரம் காட்டினாலும், உலகத்திலுள்ள தொழுநோயாளிகளில் 57 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர் என்று சில தரவுகள் தெரிவிக்கின்றன.
தொழுநோய் ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் வாய் மற்றும் மூக்கின் வழியாக வெளியேறும் எச்சில் மூலமாக பரவும் சரும நோயாகும். தொழுநோயாளியை தொடுவதால் இந்நோய் பரவாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நோயை உருவாக்குவது “மைக்கோ பேக்டீரியம் லெப்ரே” எனும் பாக்டீரியா.
இந்தக் கிருமி உடலுக்குள் நுழைந்து நோய் வரவழைக்க எடுத்துக்கொள்ளும் காலம் (Incubation Period) சராசரியாக ஐந்து ஆண்டுகள். இந்தக் காலம் ஒரு ஆண்டு முதல் இருபது ஆண்டுகள் வரை கூட இருக்கலாம். இந்த நோய் தோல், நரம்புகள், மேல் சுவாசப்பாதையின் சளிப்படலம், கண்கள் போன்றவற்றை தாக்கும் தன்மை கொண்டது. வேறு எந்தநோய்களுக்கும் இல்லாத அளவிற்கு காலம்காலமாக வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் உள்ளாவது தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான். தொழுநோய் முந்தைய ஜென்மத்தின் பாவங்களால் வருவது அன்று. ஒழுக்கக்கேடான காரியங்களுக்கு கிடைத்த சாபமும் அன்று. இது ஒரு பாக்டீரியாவால் உருவாகும் தொற்று நோய். இதுவே அறிவியல் சார்ந்த உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, தொழுநோய் என்பது புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களில் ஒன்றாகும், இது இன்னும் 120 நாடுகளில் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 200,000 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
உலக தொழுநோய் தினத்தை அனுசரிப்பது நோயின் களங்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பாக்டீரியாக்கள் அதை பரப்புவதையும், எளிதில் குணப்படுத்தக்கூடியது என்பதையும் மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அந்த நாளுக்கு வெவ்வேறு தீம் அமைக்கப்படுகிறது, மேலும் இந்த ஆண்டு, WHO இன் படி, தீம் “ஒன்றுபடுங்கள். சட்டம் இயற்றுங்கள்” ஆகும். அதாவது, தொழுநோயை அகற்ற, அரசுகள், சுகாதாரப் பணியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், நோயைத் தடுப்பது, உடனடி சிகிச்சை அளித்தல், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நோய் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.
Readmore: சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முத்திரை சீட்டுகளுக்கான திருத்தம்…! மத்திய அரசு கால அவகாசம்…!