fbpx

இன்று இந்த சமயத்தில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்…..! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை மக்களே உஷார்….!

இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஆனாலும் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் பொதுமக்களை பெரிதாக பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனாலும் வருடம் தோறும் தொடங்கும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் தற்போது வரையில் வெயிலின் தாக்கம் கூடுதலாக இருப்பதால் மக்கள் பல்வேறு அசவுகரிகளை சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை உச்சத்தில் இருக்கிறது என்பதால் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையில் வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது இன்று சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் போன்ற பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸில் இருந்து 42 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்பதால், குழந்தைகள் கர்ப்பிணிகள் முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் வரும் ஞாயிறு வரையில் வெயில் அதிகமாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக, அசவுகரியம் ஏற்படலாம் என்றும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் போன்றோர் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

மக்களே..!! இனி உங்கள் பயண விவரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட கூடாது..!! அரசு எச்சரிக்கை..!!

Fri Jun 16 , 2023
மக்கள் தங்கள் பயண விவரங்களை சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. நாட்டில் சைபர் குற்றங்களை தவிர்ப்பதற்காக மக்கள் தங்கள் பயண விவரங்கள் எதையும் சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான சைபர் தாக்குதல்கள், மக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் தகவல்களால் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனை தடுப்பதற்காக, இணைய பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், உங்கள் […]

You May Like