fbpx

இரவு நேரங்களில் ஃபிரிட்ஜ் ஸ்விட்சை ஆப் செய்யாதீர்கள்!… எந்த பயனும் இல்லை!… பூஞ்சை தொற்றுதான் உருவாகும்!

மின்சார கட்டணத்தை குறைக்க ஃபிரிட்ஜ் ஸ்விட்சை இரவு நேரங்களில் அணைத்து வைப்பதால் உணவுப்பொருட்களில் பூஞ்சை தொற்று உருவாகும், அதை நாம் சாப்பிடுவதால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும்

நாம் பயன்படுத்தும் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவைதான் அதிக மின்சார பயன்பாடுக்கு காரணமாகிறது. இதனால் மின் கட்டணத்தை குறைக்க மக்கள் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர். அந்தவகையில் மின் கட்டணத்தை குறைக்க சிலர் பிரிட்ஜை இரவு நேரங்களில் நிறுத்தி வைத்துவிடுகிறார்கள். இது அதன் உள்ளே இருக்கும் பொருட்களுக்கு நல்லதா என்ற கேள்வி எழுகிறது. உணவு பொருட்களையும் குளிர்பானங்களையும் கெட்டு போகாமல் பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும் பிரிட்ஜை, இரவு நேரத்திலோ வெளியூர் செல்லும் போதோ அணைத்து வைத்தால் அதில் உள்ள உணவு பொருட்கள் கெட்டுவிடும்.

பிரிட்ஜை அணைத்தால் அதில் 2 முதல் 3 மணி நேரம் வரை உள்புற கூலிங் இருக்கும். அதே பிரிட்ஜை 5 அல்லது 6 மணி நேரத்திற்கு இரவு நேரத்தில ஆப் செய்து வைக்கலாம் என நீங்கள் கருதினால் அது உணவு பொருட்களை கெட்டு போக வைக்கும். பிரிட்ஜின் உள்ளே அதிக வெப்பநிலை காரணமாக பூஞ்சைகள் வளரத் தொடங்கும். இதனால் பூஞ்சை பாதித்த உணவு வகைகளை நாம் உட்கொண்டால் நமது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும். பிரிட்ஜை அணைத்தால் உள்புறத்தில் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கும். பிறகு பிரிட்ஜை ஆன் செய்யும் போது கம்ப்ரஸ்ஸர் பிரிட்ஜின் உட்புறத்தை கூலாக்க பல நேரம் எடுக்கும். அப்போது கரன்ட் பில் அதிகரிக்கும்.

எனவே இரவு நேரத்தில் பிரிட்ஜை அணைத்து வைத்தாலும் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. தற்போது நவீன பிரிட்ஜ்கள் வந்துள்ளன. இவை தெர்மோஸ்டேட் ஆட்டோ கட் ஆப் ஆப்ஷனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரிட்ஜ் குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்தவுடன் கம்பரஸ்ஸரை ஆஃப் செய்துவிடும். இதனால் உங்கள் பிரிட்ஜும் கூலாக இருக்கும். மின்சாரமும் சிக்கனமாக பயன்படும்.

Kokila

Next Post

கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ்!… தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!… சுகாதாரத்துறை அமைச்சர்!

Thu Sep 14 , 2023
கேரளாவில் தனியார் மருத்துவமனையில் 24 வயதான சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக சமீபத்தில் இருவர் உயிரிழந்தனர். முதல் நபர் கடந்த மாதம் 30ம் தேதி உயிரிழந்தார். அவர் ஏற்கனவே கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததை அடுத்து, நோய் […]

You May Like