fbpx

தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்..? இனி பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை..!! அமைச்சர் ஆலோசனை..!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை டாஸ்மாக் மதுபான விற்பனை என்பது அரசின் மிக முக்கிய வருவாயாக இருக்கிறது. டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் தினமும் சராசரியாக, 147 கோடிக்கு மதுபான விற்பனை நடக்கிறது. டாஸ்மாக் பார்களில் கள்ளத்தனமாக விற்கப்படும் சரக்குகள் மதுபானங்கள், கள்ளச்சாராயம் காரணமாக அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அனுமதியின்றி செயல்படும் பார்கள், சந்துக்கடைகள், போலீஸ் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஒரு மாதமாக மதுபான விற்பனையில், 25 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்துறையை தற்போது அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனித்து வருகிறார். டாஸ்மாக் வருமானம் நிலையாக இருக்கும் அதே நேரத்தில், இந்த வருமானம் தவறான நபர்கள் கைக்கு பிரிந்து செல்வதை தடுப்பதற்கான ஆலோசனைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்வது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை விற்பனை செய்வது தொடர்பாக சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

டெட்ரா பாக்கெட்டுகள் எளிதில் உடையாது, செலவு குறைவு மற்றும் கலப்படம் செய்ய முடியாது என்பதால், அவற்றை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், கண்ணாடி பாட்டில்களை விட செலவு குறைவு என்பதாலும், டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானங்களை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்பதாலும் அவற்றை கொண்டு வர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Chella

Next Post

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றுக் கொள்ள அழைத்த ஆண் நண்பரின் பேச்சை நம்பி போன மாணவி…..! இறுதியில் நடந்த விபரீதம் மாணவியின் கதறல்…..!

Thu Jun 29 , 2023
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் இருக்கிற தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வந்தார். இவரது உறவுக்கார வாலிபர் சிவகுமார் (25) அவர் தன்னுடைய சகோதரியை குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், சிவகுமார் தன்னுடைய சகோதரி வீட்டில் தங்கி அதே பகுதியில் இருக்கின்ற ஒரு படகு கட்டும் தளத்தில் பணியாற்றி […]
பாலியல் வழக்கு..!! பர்கர் வாங்கித் தர குற்றவாளிக்கு நீதிமன்றம் உத்தரவு..!!

You May Like