fbpx

பிரபல தாதா நடத்திய போதை பார்ட்டி..!! நடிகருடன் இணைந்து குத்தாட்டம் போட்ட தமிழ் சினிமா நடிகை..!!

தாதா நடத்திய போதை பார்ட்டியில் கேரள நடிகர் மற்றும் தமிழ் சினிமா நடிகை கலந்துகொண்ட சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேரள கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை பார்ட்டி மற்றும் குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போதை விருந்து தாதா ஓம்பிரகாஷ் தலைமையில் நடந்த நிலையில், இதில் தமிழ் சினிமா நடிகை ஒருவரும் கலந்து கொண்டுள்ளார். அது வேறு யாரும் இல்லை. மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தில் நடித்த ப்ராயாகா மார்ட்டின் தான்.

இவர் அந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்டு மது மற்றும் போதை வஸ்துகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனே பார்ட்டி நடக்கும் ஓட்டலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில், போதைப் பொருள் மற்றும் குத்தாட்ட விருந்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதை தவிர கேரள நடிகரும் அந்த பார்ட்டிக்கு சென்றுள்ளார். நடிகை ப்ராயகா மார்டினுடன் சேர்ந்த அந்த நடிகரும் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து, தாதா ஓம்பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதே போல போதை பார்ட்டி குறித்த தகவல் பற்றி கேரள நடிகர் மற்றும் நடிகையுடன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓம் பிரகாஷ் கேரளாவில் பெரிய தாதாவாக இருக்கிறார். அவர் நடத்திய விருந்தில் தமிழ் நடிகைக்கு என்ன வேலை என்பது குறித்து, விசாரணைக்கு பின் முழு விவரம் வெளியே வரும் என நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Read More : BIG BREAKING | தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

English Summary

The incident where a Kerala actor and a Tamil film actress attended a drug party hosted by Dada has sparked controversy.

Chella

Next Post

ரிஷப ராசியில் பயணிக்கும் குருபகவான்..!! பணத்தை குவிக்க போகும் 3 ராசிக்காரர்கள்..!! திருமணமும் கைகூடும்..!!

Sat Oct 19 , 2024
Guru Bhagavan is the auspicious ruler of Navagrahas. He is considered to be the cause of wealth, prosperity, child blessing etc.

You May Like