fbpx

’திமுக ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் எட்டுத்திக்கும் கஞ்சா அமோகமாக விற்பனையாகிறது’..! அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு வந்த பின்தான் தமிழ்நாட்டில் எட்டுத்திக்கும் கஞ்சா அமோகமாக விற்பனையாகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் வருவதாகவும், இதில் மத்திய அரசுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி பதிலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் உச்சத்தில் உள்ளது. போதைப்பொருள் புழக்கம் பற்றி பேசிய அமைச்சர் பொன்முடி, மது ஆலை நடத்தி வரும் ஜெகத் ரட்சகன், டி.ஆர்.பாலு ஆகியோரையும் உடனிருத்தி செய்தியாளர்களை சந்தித்திருந்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப்பில் வரும் பொய்யான தகவல்களை வைத்து அமைச்சர் பேசியது வேடிக்கையானது என குறிப்பிட்டுள்ளார்.

’திமுக ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் எட்டுத்திக்கும் கஞ்சா அமோகமாக விற்பனையாகிறது’..! அண்ணாமலை

கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னரே தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலும் போதைப்பொருட்கள் பிடிபடுகிறது. அது என்ன தனியார் துறைமுகமா? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, சமூகவலைதளங்களில் திமுகவினர் பரப்பும் பொய்களை சேகரித்து ஒரு செய்தியாளர் சந்திப்பை அமைச்சர் நடத்தியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்தான் தமிழ்நாட்டில் எட்டுத்திக்கும் கஞ்சா அமோகமாக விற்பனையாகிறது. தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க மத்திய அரசின் மீது பழிபோடுவதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலில் தாங்கள் நடத்தும் மது ஆலைகளை மூடிவிட்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழ்நாடு உள்ளதாகவும், திமுகவின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் மக்களை ஏமாற்றாமல் இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்” என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

ரூ.10 லட்சம் மோசடி – நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் பரபரப்பு புகார் ?

Fri Sep 2 , 2022
திரைப்பட நடிகர் பிரசாந்த் பத்து லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக இலங்கை பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்தவர் குமுதினி. இவர் சுவிச்சர்லாந்தில் விமானநிலைய ஊழியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் பிரசாந்த் பத்து லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதை திரும்ப பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். […]

You May Like