ஜப்பானின் முக்கிய தீவுகளின் வடக்கே உள்ள ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இன்று மாலை 2.48 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் 50 கி.மீ. ஆழத்தில் தாக்கியுள்ளது என தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக ஜப்பானின் தீபகற்பத்தில் இருந்து பரவியுள்ள எரிமலைத் தீவுகளின் குழுவான இசு தீவுகளில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.