அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள அந்தமான் கடற்பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தமான் கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இன்று காலை 3:40 மணியளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என தெரிவிக்கப்டுகிறது. சுனாமி எச்சரிக்கை போன்றவை விடுக்கப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள காம்ஜாங் மாவட்டத்தில் இன்று காலை 10.19மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.5ரிக்டர் அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனவரி 24 அன்று, நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் கூற்றுப்படி, ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் டெல்லி மற்றும் பிற பகுதிகளை உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.