fbpx

அந்தமானை அதிரவைத்த நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கையா..? பீதியில் உறைந்த மக்கள்..!!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகநாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சுமார் 50,000 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டம் ஆகின. இதனை அடுத்து, இந்தியா உள்பட பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 என பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அந்தமான் நிக்கோபார் பகுதியில் வாழும் போது மக்கள் ஒருவித அச்சத்துடனே வீட்டை விட்டு வெளியே நின்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Chella

Next Post

8 வயதில் தந்தையால் பாலியல் வன்கொடுமை..!! குழந்தைப் பருவத்தில் நடந்த பயங்கரம்.!! குஷ்பு பரபரப்பு புகார்..!!

Mon Mar 6 , 2023
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பு சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மம்தா குமாரி, டெலினா கோங்தூப் ஆகியோருடன் குஷ்புவும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் தான் இவர் பதவியும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், 8 வயதிலேயே தந்தையால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார். வி தி வுமன் நிகழ்ச்சியில் மோஜோ ஸ்டோரிக்காக குஷ்பு அளித்த பேட்டியில், “ஒரு […]

You May Like