பிரியாணியில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களால் ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக கூறி மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் இயங்கி வந்த பிரியாணி கடைகளை மூடுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், நகராட்சித் தலைவருமான ரவீந்திரநாத் கோஷ் கட்டாயப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரவீந்திரநாத் கோஷ் கூறுகையில், “பிரியாணியில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களால் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இதற்குப் பின்னணியில் மருத்துவ ஆதாரங்கள் இல்லை என்றாலும், பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, நாங்கள் அதை மூடிவிட்டோம். கூச் பெஹார் நகராட்சியில் சட்டவிரோதமாக இயங்கிய பல கடைகள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக ‘கொல்கத்தா பிரியாணி கடை’ மீது ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் சில பொருட்களைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
![பிரியாணி சாப்பிடுவதால் ஆண்மைக் குறைவு பாதிப்பு..!! ஓட்டல்களை இழுத்து மூடியதால் பரபரப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/Briyani-1024x576.jpg)
மேலும் “இந்தக் கடை மட்டுமல்ல, இன்னும் பலர் சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றனர். சாலைகளில் சமைக்கிறார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பீகார் மற்றும் உத்தரப்பிரதேசமாக இருக்கலாம். இந்த கடைகள் நள்ளிரவு வரை திறந்திருக்கும். அனைத்து வகையான சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இங்கு மக்கள் குடித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றனர். இவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை. இந்த நபர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைக் கண்டறிய நாங்கள் காவல் துறையினருக்குத் தெரிவித்துள்ளோம்” என கூறினார்.
![பிரியாணி சாப்பிடுவதால் ஆண்மைக் குறைவு பாதிப்பு..!! ஓட்டல்களை இழுத்து மூடியதால் பரபரப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/Rabindra_Nath_Ghosh.jpg)