fbpx

மின்சார துறையில் வேலைவாய்ப்பு…! 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Draughtsman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

இந்த பணிக்கு மொத்தம் 32 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6226e4afeb150a3a951bb304

Vignesh

Next Post

சகோதரிகள் வன்கொடுமை செய்து கொலை..! முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

Fri Sep 16 , 2022
பட்டியலினத்தை சேர்ந்த சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி ஒருவனை போலீசார் இன்று துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர் . உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பட்டியலினத்தை சேர்ந்த சகோதரிகள், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பின்பு மரத்தில் தொங்கவிடப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த […]
சகோதரிகள் வன்கொடுமை செய்து கொலை..! முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

You May Like