fbpx

தனது சொந்த ஊரில் முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றினார் எடப்பாடி பழனிசாமி..!!

எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை செலுத்தினார்.

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம். மாலை 6 மணி வரை அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு வரிசையில் நின்று அவர் தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Read More : வாக்காளர்களே செம குட் நியூஸ்..!! இன்று அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்..!!

Chella

Next Post

தொடங்கியது ஜனநாயகத் திருவிழா: முதல் ஆளாக வாக்களிக்க சென்ற பிரபலங்கள்..!

Fri Apr 19 , 2024
18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்பட 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19ஆம் தேதி) தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடி. மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை […]

You May Like