fbpx

புதுச்சேரி காரைக்காலில் பரவலாக மழை…..! மகிழ்ச்சியில் மக்கள்….!

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். வெயிலின் தாக்கம் குறையவில்லை. குளிர் காற்றுக்காக பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் காரைக்கால் கடற்கரைக்கு நாள்தோறும் மாலை வேளையில் சென்று இரவு நீண்ட நேரத்திற்கு பின்னர் வீடு திரும்புகின்றனர்.

இத்தகைய நிலையில்தான் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலெடுத்து சுழற்சியின் காரணமாக, காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி கடலோர மாவட்டமான காரைக்காலில் நேற்று இரவு பரவலாக மழை பெய்து குளிர்ச்சியை உண்டாக்கியது அதேபோல இன்று காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.

காரைக்கால் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணியர் கடற்கரைக்கு சென்று வந்தனர். மழை பெய்த நிலையிலும் இவர்கள் அதனை பொறுக்காமல் நனைந்தபடி மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், மழை இல்லை என்றாலும் பரவலாக லேசான மழை ஒட்டுமொத்த மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

16 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை..!! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்றம்..!!

Sun Jun 18 , 2023
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கீழ்அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். செந்தில் குமாரின் மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், செந்தில்குமாருக்கு 16 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவர் பள்ளியில் பயின்று வருகிறார். மாணவியுடன் தற்போது அவர் தந்தை மட்டுமே உள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருக்கும்போது, அவரது 16 வயது மகளை செந்தில்குமார் பாலியல் பலாத்காரம் […]
16 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை..!! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்றம்..!!

You May Like