அமெரிக்க: டல்லாஸுக்கு வடக்கே உள்ள ஷாப்பிங் மாலில் துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
டெக்சாஸின் ஆலனில் உள்ள பிரீமியம் அவுட்லெட்ஸ் மாலுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அந்த நபரை காவல்துறையினர் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றதாக நகர காவல்துறைத் தலைவர் பிரையன் ஹார்வி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஆலன் தீயணைப்புத் துறைத் தலைவர் ஜோன் பாய்ட் அதே செய்தியாளர் சந்திப்பில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றது, அவர்களில் இருவர் இறந்ததாக தெரிவித்துள்ளார்.