fbpx

அதிர்ச்சி..!! கான்ஸ்டபிள் உடற்கூறு தேர்வில் 8 பேர் மரணம்.. 100 க்கும் மேற்பட்டோர் மயக்கம்..!! – பின்னணியில் போதை பொருள் கும்பல்?

ஜார்கண்டில் கான்ஸ்டபிள் உடல் கூறு தகுதிதேர்வுகளில் இரண்டு நாட்களில் 8 பேர் மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 22 அன்று கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான உடற்கூறு செயல்முறை தொடங்கியது. உடல்கூறு தேர்வுகளின் போது வெவ்வெறு இடங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல் பரிசோதனையின் போது மூச்சுத் திணறலால் மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடற்கூறு தேர்வின் போது தங்கள் செயல்திறனை அதிகரிக்க ஆற்றல் பானங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். சிலர் ஆற்றல் பானங்களை உட்கொண்டதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், கடுமையான வெப்பம் மற்றும் நீண்ட வரிசையில் நின்றதே மயக்கம் மற்றும் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்கின்றனர்.

இறப்புக்கான சரியான காரணங்கள் பிரேத பரிசோதனை மூலமே கண்டறியப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆபத்தான நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.கே.ரஞ்சன் கூறுகையில், இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட நபர்களிடையே ஊக்க மருந்து பயன்பாடு குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. பல நோயாளிகள் குறைந்த இரத்த அழுத்தம், அதிக வியர்வை மற்றும் சுவாசிப்பதில் சிரமத்துடன் இருந்தனர், சிலர் கோமா நிலைக்குச் சென்றனர் என்றார்.

பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முதல்வர் ஹேமந்த் சோரன், கான்ஸ்டபில் ஆட்சேர்ப்பு தேர்வுகளின் நேரத்தை மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார். கலால் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பு வாரியத்தின் தலைவர் முகேஷ் குமார், வேட்பாளர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு குறித்து விசாரிக்குமாறு காவல்துறையை வலியுறுத்தியுள்ளார். மயங்கி விழுந்த சில நபர்கள் தங்கள் சொந்த பெயர்கள் அல்லது முகவரிகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை, இது மேலும் கவலைகளை எழுப்புகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆள்சேர்ப்பு நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள கடைகளில், செயல்திறனை அதிகரிக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படலாம் என்ற அச்சத்தில், போலீஸார் அப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். ஊக்கமருந்து மட்டுமல்லாமல் போதைப்பொருள் விற்பனை தொடர்பான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more ; செப்டம்பர் மாதம் மட்டும் 15 நாட்கள் பேங்க் லீவு..!! விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறையா? செக் பண்ணுங்க

English Summary

Eight Die, Over 100 Faint During Excise Constable Recruitment Test; Suspected Stimulants Under Investigation

Next Post

மேற்கு வங்கம் | ஸ்கேன் அறையில் சிறுமி பலாத்காரம்..!! அடுத்தடுத்த இரண்டு சம்பவங்கள்.. மம்தா அரசுக்கு நெருக்கடி!!

Sun Sep 1 , 2024
Howrah Hospital Staff Arrested For Allegedly Molesting 14-year-old Girl In CT Scan Room

You May Like