fbpx

நடைப்பயிற்சி செல்லும்போது முதியவர்களிடம் அடுத்தடுத்து நடைபெற்ற வழிப்பறி…..! கோவில்பட்டி அருகே பரபரப்பு…..!

ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி(72) இவர் ஒட்டப்பிடாரம் சாலையில் நேற்று அதிகாலை நடைபெற்றியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குறுக்கு சாலை வழியாக 3 மோட்டார் சைக்கிள் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரிடம் புளியம்பட்டிக்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழிக்கேட்டுள்ளனர். அவர் வழி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் அணிந்திருந்த மோதிரத்தை அவர்கள் பறித்துச் செல்ல முயற்சி செய்தனர்.

ஆனால் அவர் சத்தமிட தொடங்கியதால் ஆத்திரம் கொண்ட அந்த கும்பல் அரிவாளால் கிருஷ்ணசாமியை தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த 2.5 பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இதனை தொடர்ந்து அதே நபர்கள் நீதிமன்றம் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் மாடசாமி(60) என்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 சவரன் செயின், 2.5 சவரன் கைச்செயின், 1.5 சவரன் மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து ஒட்டப்பிடாரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அதிகாலையில் தனியாக நடை பயிற்சிக்கு செல்லும் போது நகைகளை அணிந்து செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Post

நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாயும் மகனும் தற்கொலை……! 2 இளைஞர்கள் அதிரடி கைது தர்மபுரி அருகே சோகம்…..!

Wed Jun 7 , 2023
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பழைய குவாட்ரஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிவேல். இவருடைய மனைவி சாந்தி(56) இவருடைய மகன் விஜய் ஆனந்த் (35) இவர்கள் இருவரும் கடந்த நான்காம் தேதி மாலை வீட்டிலேயே நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கு குறித்து அதியமான் கோட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பொறியியல் பட்டதாரியான விஜய்ஆனந்த் அவருடைய நண்பர்கள் ஆன பள்ளி பாளையத்தை சேர்ந்த […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like