fbpx

மின் கட்டண உயர்வு..! மேல்முறையீடு வழக்கு..! உயர்நீதிமன்ற கிளை அதிரடி.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி முடிவு எடுப்பதற்குத் தடை விதித்து, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து தமிழ்நாடு மின்சாரம் வாரியம் தரப்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத் துறை உறுப்பினர் நியமிக்கும் வரை, தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மின் கட்டண உயர்வு..! மேல்முறையீடு வழக்கு..! உயர்நீதிமன்ற கிளை அதிரடி.!

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மின்வாரியம் சார்பிலும், எதிர்தரப்பினர் சார்பிலும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பின்னர், இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பெண்களுக்கு நற்செய்தி.. ஒரே நாளில் ரூ.288 குறைந்த தங்கம் விலை..

Wed Aug 31 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

You May Like