மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்கள் ஆலோசித்து வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் 2022-23 முதல் 2026-27 வரைக்கான மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர் தலைமையில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் பேசிய ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர், ”30 நாட்கள் பொதுமக்களுக்கு கொடுத்திருக்கிறோம். அதற்கான நேரம் தற்போது முடிந்து விட்டது. கோவையில் என்ன சொன்னார்களோ அதுதான் இங்கேயும் பேசப்பட்டது என கூறினார்.

8 கோடி பேரின் கருத்துக்களை நாங்கள் கேட்க முடியாது என தெரிவித்த அவர், வேண்டும் என்றால் உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம் என்றும் பொதுமக்களின் கருத்துக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மின்சார தட்டுப்பாடு, மின்தேவை உள்ளிட்ட பொதுமக்களின் கருத்துக்களை நாங்கள் மனதில் ஏற்றி கொண்டோம். இதற்கான முடிவுகள் ஆலோசித்து வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.