fbpx

மின் கட்டண உயர்வு..! பொதுமக்களின் முடிவு என்ன..? வெளியான முக்கிய தகவல்..!

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்கள் ஆலோசித்து வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் 2022-23 முதல் 2026-27 வரைக்கான மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர் தலைமையில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் பேசிய ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர், ”30 நாட்கள் பொதுமக்களுக்கு கொடுத்திருக்கிறோம். அதற்கான நேரம் தற்போது முடிந்து விட்டது. கோவையில் என்ன சொன்னார்களோ அதுதான் இங்கேயும் பேசப்பட்டது என கூறினார்.

மின் கட்டண உயர்வு..! பொதுமக்களின் முடிவு என்ன..? வெளியான முக்கிய தகவல்..!

8 கோடி பேரின் கருத்துக்களை நாங்கள் கேட்க முடியாது என தெரிவித்த அவர், வேண்டும் என்றால் உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம் என்றும் பொதுமக்களின் கருத்துக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மின்சார தட்டுப்பாடு, மின்தேவை உள்ளிட்ட பொதுமக்களின் கருத்துக்களை நாங்கள் மனதில் ஏற்றி கொண்டோம். இதற்கான முடிவுகள் ஆலோசித்து வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

”மாணவர்களே இனி இப்படித்தான் எழுத வேண்டும்”..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

Tue Aug 23 , 2022
பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், இனிஷியலை, தமிழில் தான் எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்திருந்த உத்தரவில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், தங்கள் இனிஷியல் மற்றும் பெயரைத் தமிழில் தான் எழுத வேண்டும். […]
கொடூரம்..!! சிறுவனின் கையில் டிரில் மெஷினால் ஓட்டை போட்ட சைக்கோ ஆசிரியர்..!! பரபர சம்பவம்

You May Like