fbpx

அவசர சிகிச்சை பிரிவு..!! செயற்கை சுவாசம்..!! விஜயகாந்த் உடல்நிலை குறித்து அமைச்சர் சொன்ன தகவல்..!!

விஜயகாந்த் நலமுடன் உள்ளதாகவும், தேவைப்படும் போது மட்டும் அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சனிக்கிழமை இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினேன். விஜயகாந்துக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு இருமலும் தொடர் மூச்சு திணறலும் இருந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். அதற்காக சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதால் தேவைப்படும் போது செயற்கை சுவாசமும், மற்ற நேரங்களில் நல்ல முறையில் அவர் இருக்கிறார். விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்’’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Chella

Next Post

தொடரும் கனமழை..!! இந்த மாவட்ட பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை..?

Thu Nov 23 , 2023
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை […]

You May Like