fbpx

வீடு, தனி நபர் கடன்களுக்கான EMI தொகை அதிகரிப்பு..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தற்போதைய காலகட்டத்தில் சொந்த வீடு என்பது அனைவரின் கனவு. இதனைப் பூர்த்தி செய்ய அரசு மற்றும் தனியார் வங்கிகள், வருமானம் சார்ந்த வீடு மற்றும் தனிநபர் மற்றும் தொழில் கடன்களை வழங்குவதில் போட்டி போடுகின்றன. வீட்டுக் கடன் வாங்கும்போது அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி தெரியாமலேயே பலர் வாங்குகின்றனர். கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து ரிசர்வ் வங்கி 5 முறை கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. மொத்தம் 25% உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், வீட்டுக்கடன், தனிநபர் கடன் பெற்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாதாந்திர தவணை (EMI) அடிப்படையில் மாறுபடும் வட்டி விகிதங்களைக் கொண்ட வீட்டுக் கடன்களுக்கு, வட்டி விகிதம் அதிகரிக்கும் போதெல்லாம், மாதாந்திர தவணையும் அதிகரிக்கும். ஆனால், நிலையான வட்டி விகிதம் மாறாமல் இருக்கும். பெரும்பாலும் வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காமல் மாதத் தவணையை அதிகரித்து, கடன் காலத்தை நீட்டிக்கின்றன.

இந்நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் கடன் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், கடன் தொகைக்கு அபராத வட்டி விதிக்கப்பட்டு, அது வட்டியுடன் சேர்க்கப்படுகிறது. இதனைத் தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வட்டி அடிக்கடி அதிகரித்து வருவதால், கடன் வாங்குபவர்கள் நிலையான வட்டி விகிதத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். மேலும், இஎம்ஐ அதிகரிப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட வகை கடன்களுக்கான EMI அதிகரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. புதிய விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர்கள் வட்டியில் இருந்து நிலையான வட்டி விகிதத்திற்கு மாறும்போது வட்டி விகிதம் மாறும். நிலையான வட்டி விகிதம் பொதுவாக மாறி வட்டி விகிதத்தை விட அரை சதவீதம் அதிகமாக இருக்கும். இதன் மூலம், நிலையான வட்டிக்கு மாறும்போது EMI அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Chella

Next Post

சி.எம்.எஸ்.எஸ் நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு….! ஆத்தாடி இத்தனை லட்சம் சம்பளமா….?

Sat Aug 19 , 2023
நம்முடைய செய்தி நிறுவனத்தில், தினந்தோறும் வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகளை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த விதத்தில், இன்றும், பலதரப்பட்ட வேலை வாய்ப்பு செய்திகள் வெளியாகி வருகிறது. அதை பார்த்து, படித்து தெரிந்து கொண்டு, வேலைவாய்ப்பற்ற நபர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த விதத்தில், இன்று சி.எம்.எஸ்.எஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், அந்த நிறுவனத்தில், காலியாக உள்ள general manager பணிக்கான இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த […]

You May Like