fbpx

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! டிஎன்பிஎஸ்சி வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான ஆணையை பால்வள ஆணையர் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில், மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் நடைபெற்ற நியமனங்களில் பல்வேறு முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 201 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, 2021-22இல் மானியக் கோரிக்கையின் போது, ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர் வரையிலான பதவியிடங்கள், அரசின் ஆணை பெற்று டிஎன்பிஎஸ்சி மூலமாகவே நடத்தப்படும் என்று அமைச்சர் மு. நாசர் அறிவித்தார்.

அதன் அடிப்படையில், ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 காலியிடங்களின் எண்ணிக்கையை பால்வள ஆணையர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பியுள்ளார். விரைவில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதவிகளுக்கான கல்வித் தகுதிகள் உள்ளிட்ட இதர பொது நிபந்தனைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

ஈரோடு தேர்தல்.. காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு...

Wed Feb 8 , 2023
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்ததது.. மொத்தம் 96 வேட்பாளர்கள் தேர்தலில் […]

You May Like