fbpx

உரிமைத்தொகை ரூ.2,000..!! சிலிண்டர் விலை ரூ.418..!! பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

* சமையல் எரிவாயு விலை ரூ.418. (மானியம் ரூ.500).

* மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000ஆக உயர்வு.

* முதியோர்/ஆதரவற்றோர் உதவித்தொகை ரூ.3,000ஆக உயர்வு.

* குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் ரூ.5,000.

* வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் ₹1,000 பரிசு.

* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை.

* மழலையர் வகுப்பில் இருந்து 8ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கட்டாயம்.

* தமிழ்வழியில் படித்தோருக்கு உயர்கல்வியில் 30% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* மே 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு. தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.

* குட்காவை தடை செய்ய புதிய சட்டம் இயற்றும்படி மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்.

* கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க காவல்துறையில் தனிப்பிரிவு தொடக்கம்.

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு குறிப்பிட்ட மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

* ஜனவரி, ஜூலை மாதங்களில் தொகுதி – 4 பணிகளுக்கும், பிப்ரவரியில் முதல் தொகுதி பணிகளுக்கும், மார்ச் மாதம் இரண்டாம் தொகுதி பணிகளுக்கும் அறிவிக்கைகள் வெளியிடப்படும். முதல் தொகுதி பணிகளை தவிர்த்து, பிற பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படும்.

* புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்பட்டு, நடப்பாண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

* இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களில் நிலவும் முரண்பாடுகள் கலையப்படும்.

* அரசு மருத்துவர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும். அவர்களுக்கு 05, 09, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கப்படும்.

* அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

Chella

Next Post

”இனி இந்திரா காந்தி பெயரில் சினிமா விருதுகள் இல்லை”..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

Wed Feb 14 , 2024
சினிமாத் துறையில் சிறந்த படைப்புகளுக்கும் கலைத்துறையினருக்கும் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக இவை கருதப்படுவதால், ரசிகர்கள் மத்தியிலும் இந்த விருதுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டு. அதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இந்தாண்டு வழங்கப்பட உள்ளன. இதற்கான திரைப்படங்களை சமர்ப்பிக்கும் பணி கடந்த ஜனவரி 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தாண்டு வழங்கப்படவுள்ள தேசிய விருதுகள் மற்றும் அதன் […]

You May Like