fbpx

ஈரோடு இடைத்தேர்தல்..!! சில்வர் குடத்துக்காக நடுரோட்டில் சண்டை..!! கனிமொழி பிரச்சாரத்தில் பரபரப்பு..!!

ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட கனிமொழியின் கூட்டத்துக்கு வந்த பெண்கள் சில்வர் குடத்துக்காக அடித்துக் கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஈரோடு சம்பத் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்துக்கு வரும் பெண்களுக்கு சில்வர் குடம் மற்றும் தட்டு பரிசாக வழங்குவதாகக் கூறி அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில், கனிமொழி வருவதற்கு சற்று தாமதமானதால் கூட்டத்துக்கு வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு குடம் வழங்கப்பட்டது. வரிசையாக பெண்களுக்கு குடம் வழங்கிய நேரத்தில் அனைவரும் ஒரே இடத்தில் குவிந்ததால் குடம் கொடுக்க முடியாமல் நிர்வாகிகள் திணறினர்.

இதையடுத்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத திமுகவினர், சில்வர் குடம் அடங்கிய சிமெண்ட் சாக்கு பையை வீசியெறிந்தனர். இதையடுத்து குடத்தை எடுக்க பெண்கள் போட்டி போட்டு கொண்டு சில்வர் குடங்களை எடுத்தனர். அதில் ஒரு குடத்துக்கு இரு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டனர். குடம் இல்லாதவர்களுக்கு சிலர் தட்டு பரிசாக வழங்கப்பட்டது. சில்வர் குடத்துக்கு பெண்கள் சண்டை போடுவதை அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசார் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

Chella

Next Post

’சமந்தாவை தொடர்ந்து வினோத நோயால் அவதிப்படும் நடிகை அனுஷ்கா’..!! படப்பிடிப்பு நிறுத்தம்..!!

Fri Feb 17 , 2023
சிரிப்பை அடக்க இயலாமல் தவிக்கும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், படப்பிடிப்பு அடிக்கடி நிறுத்தப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார் நடிகை அனுஷ்கா. ப்ரண்ட்ஸ் படத்தில் சிரிப்பை அடக்க இயலாமல் தவிக்கு விஜய்யை போல நிஜத்தில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் நடிகை அனுஷ்கா. தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் சிம்ரனுக்கு அடுத்த படியாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. பாகுபலி 2-க்கு பின்னர் உடல் பருமன் […]

You May Like