fbpx

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! அமமுக வேட்பாளரை அறிவித்தார் டிடிவி தினகரன்..!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக சிவபிரசாந்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு (98) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

தமிழக இளைஞர்களை ஓடவிட்ட வடமாநில இளைஞர்கள்..!! வைரலாகும் வீடியோ..!! உண்மை என்ன..?

Fri Jan 27 , 2023
திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையத்தில் தமிழக இளைஞர்களை வட மாநில தொழிலாளர்கள் ஓட ஓட விரட்டியதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். வடமாநிலங்களில் இருந்து இளைஞர்கள் பிழைப்பிற்காகத் தமிழ்நாடு வருவது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால், தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இருந்த போதிலும் ஹோட்டல், கட்டிட வேலை தொடங்கிப் பல பணிகளுக்கு வடமாநில தொழிலாளர்களின் தேவை இருந்து […]
தமிழக இளைஞர்களை ஓடவிட்ட வடமாநில இளைஞர்கள்..!! வைரலாகும் வீடியோ..!! உண்மை என்ன..?

You May Like