fbpx

இந்த வேலையை இவ்வளவு ஈசியா முடிச்சிடலாமா..? வெறும் 110 ரூபாய் இருந்தால் போதும்..!! எப்படி தெரியுமா..?

பான் கார்டுகளில் பிழைகள் இருந்தால், அந்த பிழைகளை நாம் ஆன்லைனிலேயே சரிசெய்துவிடலாம். அதேபோல, புது பான்கார்டுகள் தேவையென்றாலும், ஆன்லைனிலேயே விண்ணப்பித்தால் போதும். ஒவ்வொரு நபருக்கும் பான்கார்டு அவசியம். வங்கிக் கணக்கு திறப்பதற்கும், கடனுக்கு விண்ணப்பிப்பதற்கும், வருமான வரித் தாக்கல் செய்யவும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், அதில் எந்த பிழையும் இல்லாமல் இருக்க வேண்டும். ஒருவேளை பிழை இருந்துவிட்டால், அல்லது புது பான் கார்டு தேவையென்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

* புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற வெப்சைட்டிறக்கு செல்ல வேண்டும்.

* விண்ணப்பத்தில் “Application Type” -> “Changes or Correction in Existing PAN card” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை இந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

* அப்போது தரப்படும் டோக்கன் நம்பரை, சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த டோக்கன் நம்பரைதான், மெயிலில் அனுப்ப வேண்டும்.

* திருத்தம் செய்ய வேண்டிய விவரங்களை பதிவிட்ட பிறகு, அடையாள மற்றும் முகவரி ஆவணங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்டவைகளையும் குறிப்பிட வேண்டும்.

* அனைத்தும் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். இதற்கு ரூ.110 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு திருத்தப்பட்ட பான் கார்டுகள், நீங்கள் விண்ணப்பத்தில், குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.

அதேபோல, ஒரே ஒரு பான்கார்டுதான் நாம் வைத்திருக்க அனுமதி உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்திருந்தால், வருமான வரித்துறை உங்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கும். அத்துடன், 10,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

Chella

Next Post

இந்த வங்கியில் கடன் வாங்கியிருக்கீங்களா..? என்னங்க இப்படி ஆகிப்போச்சு..!!

Sat Sep 9 , 2023
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக ஹெச்.டி.எஃப்சி. வங்கி உள்ளது. இந்த வங்கி ஏற்கனவே கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஹெச்.டி.எஃப்சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது, அனைத்து வகையான கடன்களுக்கான மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் ரேட் (MCLR) 15 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கடனுக்கான இ.எம்.ஐ. […]

You May Like