fbpx

Ethirneechal | குடிபோதையில் காவலர் மீது காரை ஏற்றிய எதிர்நீச்சல் நடிகை மதுமிதா..!! அதிரடி கைது..!! பெரும் பரபரப்பு..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் தன்னுடைய ஆண் நண்பரோடு காரில் பயணிக்கும் போது ராங் ரூட்டில் சென்று எதிரே வந்த போலீசார் வாகனத்தின் மீது மோதியதால் அந்த போலீசார் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.சமீபத்தில் தான் நடிகை மதுமிதா புதிய கார் வாங்கியிருந்தார். இந்த நிலையில் அவருடைய ஆண் நண்பரோடு மதுமிதா குடிபோதையில் இருந்ததாகவும் போதையில் இருவருமே காருக்குள் இருந்தபோது கார் வேகமாக வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தமிழ் சீரியல்களில் டாப் இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பிடித்து வருகிறது. இந்த சீரியலுக்கு சமீப காலமாகவே சோதனை காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே கடந்த வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் மாரிமுத்துவின் மரணம் ஏற்பட்டது. அவரது இறப்பால் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் அதிக அளவில் வருத்தத்தில் இருந்தனர். அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் கதைகளில் மாற்றமும் செய்யப்பட்டது. ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி அறிமுகம் ஆகி இருக்கிறார்.

வேலராமமூர்த்தி வில்லத்தனம் மட்டுமே செய்கிறார் என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. இதற்கு முன்பு இருந்த மாரிமுத்து வில்லத்தனத்தையும் காமெடி கலந்து செய்வதால் அவர் மீது ஒரு மரியாதையும், பாசமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், இப்போது இருக்கும் வேலராமமூர்த்தி மீது கோபம் மட்டுமே ஏற்படுவதாக பலரும் கமெண்ட்களில் தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் இப்போது சீரியல் கதையும் ஜவ்வு போல இழுக்கத் தொடங்கி இருக்கிறது.

இப்படியான நிலையில் மேலும் இந்த சீரியலுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதாவது இந்த சீரியலில் கதாநாயகி பெண்களின் முன்னேற்றத்தை பற்றி வகுப்பு எடுக்கும் ஒரு கேரக்டராகவே இருக்கிறார். ஆனால், நிஜத்தில் இவர் செய்த செயல் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, சில தினங்களுக்கு முன்பு நடிகை மதுமிதா குடிபோதையில் கார் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மதுமிதாவும் அவருடைய ஆண் நண்பரும் காரில் வந்து கொண்டிருந்தபோது இருவருமே மது அருந்தியதாக கூறப்படுகிறது. சோழிங்கநல்லூர் பக்கத்தில் உள்ள ஒரு வழி பாதையில் அதுவும் ராங் ரூட்டில் காரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவர்களுடைய கார் அதிவேகமாக வந்ததாகவும் எதிர் பக்கத்தில் இருந்து ஒரு போலீஸ்காரர் பைக்கில் வந்து கொண்டிருந்த போது அவருடைய பைக் மீது இவர்களுடைய கார் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் ஸ்பாட்டுக்கு வந்து இவர்களிடம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது மதுமிதா மற்றும் அவருடைய ஆண் நண்பர் இருவருமே எங்கள் மீது தப்பில்ல போலீஸ்காரர் தான் வேகமாக வந்து காரில் மோதிட்டாருன்னு வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். உடனடியாக மதுமிதாவையும் அவருடைய ஆண் நண்பரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று காரையும் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். மதுமிதாவின் கார் மோதியதில் காயமடைந்த காவலர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறாராம்.

Read More : Lok Sabha | பாஜகவுக்கு 18.48%, அதிமுகவுக்கு 17.26% வாக்குகள்..!! தனியார் செய்தி நிறுவனத்தை வெச்சு செய்யும் அதிமுகவினர்..!!

அதுபோல மதுமிதாவோடு காரில் பயணித்த அவருடைய ஆண் நண்பர் கேரளாவை சேர்ந்தவராம். இப்போது சென்னையில் தான் ஐடியில் வேலை செய்து கொண்டிருக்கிறாராம். கடந்த வருடத்தில் புது கார் வாங்கிய மதுமிதா இப்போது விபத்தில் சிக்கி பிரச்சனையில் மாட்டி இருக்கும் நிலையில், அவர் நான் காரை ஓட்டல, என் பிரண்டு தான் கார் ஓட்டுனது, சின்ன விபத்துங்க.. என் பிரண்டு தான் தப்பு பண்ணிட்டான்… அதை பத்தி பெருசா பேச எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Chella

Next Post

RAJASTHAN| கணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம்.! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

Tue Feb 27 , 2024
ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் பலோடி மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியும் இன்ஸ்டாகிராம் இன்ஃபளுயன்சருமான அனாமிகா பிஷ்னோயை குடும்ப தகராறில் சுட்டுக் கொன்றார். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பவர் அனாமிகா பிஷ்னோய். இவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் தனது கடையில் இருந்த போது கணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பகல் பொழுதில் நடைபெற்ற இந்த […]

You May Like