fbpx

“உங்களை பார்த்து பச்சோந்திகள் கூட வெட்கப்படும்..” பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கிண்டல் செய்த பாஜக

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை நேற்று சந்தித்தனர். மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது.. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்நிலையில் நிதீஷ் குமாரின் இந்த சந்திப்பை பாஜக தலைவர் நிகில் ஆனந்த் கிண்டல் செய்துள்ளார்.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நிதிஷ்குமார் பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை சந்திக்கும் போது குனிந்திருப்பதையும், தற்போது ராகுல்காந்தியை சந்திக்கும் போது குனிந்திருப்பதை காட்டும் பல புகைப்படங்களை பகிரிந்துள்ளார்.. மேலும் “ நீங்கள் நிறைய நிறங்களை மாற்றுகிறீர்கள் சார். சில நேரங்களில் உங்களை பார்த்து பச்சோந்தி கூட வெட்கப்படும் என்று தோன்றுகிறது. தேவையைப் பார்த்து நிறத்தை மாற்ற நீங்கள் எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

இதே போல் பீகார் பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரியும் நிதிஷ்குமாரை விமர்சித்துள்ளார்.., “நிதிஷ் குமார் அதிகாரத்திற்காக இன்னும் யார் யார் முன் பணிவார் என்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Thu Apr 13 , 2023
ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பெரும் வசதிகளை வழங்கி வருகிறது. தற்போது ரேஷனில் அரசால் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கார்டு வைத்திருப்போருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். இதற்கிடையே, 2024ஆம் ஆண்டுக்குள் சத்து நிறைந்த தரமான அரிசியை அரசு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் விநியோகிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் தற்போதைய நோக்கம் ஆகும். இந்த அரிசி தற்போது 269 மாவட்டங்களில் பிடிஎஸ் […]

You May Like