fbpx

’விடிய விடிய எவன் கூட பேசிட்டு இருக்க’..!! மனைவியின் வாயை பொத்தி… சரமாரியாக கத்தியால் குத்தி.!! கடைசியில் ட்விஸ்ட்..!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, கணவருடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தாயுமானசுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (40). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஜய் என்ற 16 வயது மகனும், அக்சிதா என்ற 11 வயது மகளும் உள்ளனர். மனைவி சரண்யா ராமநாதபுரத்தில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சரண்யா சமீப காலமாக வாலிபர் ஒருவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இது கணவர் பன்னீர்செல்வத்தின் கவனத்திற்கு வரவே மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தம்பதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சில நாட்களுக்கு முன், தகராறு முற்றி சரண்யாவை பன்னீர்செல்வம் அடித்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு சரண்யா தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, இருவரையும் பெரியவர்கள் சமாதானம் செய்து மீண்டும் சேர்த்து வைத்துள்ளனர்.

ஆனாலும், இரவு நேரத்தில் மட்டும் சரண்யா, போன் பேசுவதற்காக தந்தை வீட்டிற்கு தூங்கச் சென்று வந்துள்ளார். எவ்வளவோ சொல்லியும் மனைவி கேட்காததால், பன்னீர்செல்வம் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை (மே 3) நள்ளிரவு தனது மாமனார் வீட்டிற்கு சென்ற பன்னீர்செல்வம், தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் வாயை பொத்தி கத்தியால் குத்திக்கொலை செய்தார். பின்னர் நேராக தனது வீட்டிற்கு வந்து அதே கத்தியால் தன்னையும் குத்திக்கொண்டு தற்கொலை செய்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

ஒலிம்பிக் தொடர் ஓட்டப் பந்தயத்திற்கு தகுதி..!! 2-வது இடம் பிடித்து அசத்தல்..!! தமிழக வீரர், வீராங்கனை மாஸ்..!!

Mon May 6 , 2024
உலக தடகள தொடர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், 2-வது இடம் பிடித்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றன. பெண்களுக்கான 4X400 மீட்டர் பிரிவில், ரூபால் சௌத்ரி, எம்.ஆர்.பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ தண்டி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகிய 4 பேர் கொண்ட அணி, பந்தய தூரத்தை 3 நிமிடம் 29.35 வினாடிகளில் கடந்து 2-வது இடத்தை பிடித்தது. ஜமைக்காவை சேர்ந்த அணி 3:28.54 பந்தய […]

You May Like