fbpx

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்..

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது..

சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அவர் நெஞ்சுவலி காரணமாக, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய பிரச்சனையின் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு லேசான கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் இதயத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி இருப்பதாக மருத்துவமனை கூறியிருந்தது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இதனிடையே கடந்த 22-ம் தேதி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.. எனினும் இதய பாதிப்புக்கு ஐ.சியூவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது..

இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.. அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் உடல்நிலை சீராக உள்ளதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது..

Maha

Next Post

என்ன எதிர்நீச்சல் தொடர் நடிகை மதுமிதாவிற்கு திருமணம் ஆகி விட்டதா…..?

Thu Apr 6 , 2023
இயக்குனர் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தமிழக மக்கள் அனைவரும் பார்த்து பழகிய பிரபலங்களின் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர், அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமைகளையும் மையமாக கொண்டு இந்த தொடரின் கதைக்களம் அமைந்திருக்கிறது. சமீபத்தில் இந்த தொடர் தனக்கு கோலங்கள் தொடர் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை இந்த தொடர் மிக விரைவிலேயே கொடுத்துவிட்டதாக திருச்செல்வமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் […]

You May Like