ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது..
சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அவர் நெஞ்சுவலி காரணமாக, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய பிரச்சனையின் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு லேசான கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் இதயத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி இருப்பதாக மருத்துவமனை கூறியிருந்தது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இதனிடையே கடந்த 22-ம் தேதி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.. எனினும் இதய பாதிப்புக்கு ஐ.சியூவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது..
இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.. அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் உடல்நிலை சீராக உள்ளதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது..