fbpx

காருக்கு வழிவிடாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதால் வெறிச்செயல்….பெண்ணை தாக்கிய அ.தி.மு.க முன்னாள் .நிர்வாகி கைது  …

காருக்கு வழிவிடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணைத் தாக்கி மானபங்கம் செய்ய முயற்சித்ததாக சேலம் அருகே அ.தி.மு.க. முன்னாள்நிர்வாகி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகரத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் செயலாளராக இருந்தவர் இளங்கோ (33). இவர் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை வீடு புகுந்து தாக்கியுள்ளார். அதோடு மட்டுமின்றி  அவரை , மானபங்கம் செய்ய முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் நரசிங்கபுரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இளங்கோ உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.

28 ஆண்டுகளாக
28 ஆண்டுகளாக தனது மகனை அறைக்குள் பூட்டிவைத்த கொடூர தாய் கைது.. மகனின் தற்போதைய நிலை என்ன..?

 இளங்கோ தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது அந்த பெண் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். காருக்கு வழிவிடாமல் இடையூறாக சென்றதால் அவர்கள் ஆத்திரடைந்தனர். இதையடுத்து 5 பேரை அழைத்துக் கொண்டு இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

Next Post

அதிமுக பொதுக்குழு வழக்கு..! முந்திக் கொண்ட எடப்பாடி..! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனு..!

Sun Sep 4 , 2022
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கமும், எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானமும் செல்லும் என்றும் இரு நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் […]
’இதை மட்டும் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்’..!! எடப்பாடிக்கு சவால் விடுத்த ஓபிஎஸ்..!!

You May Like