fbpx

#புதுக்கோட்டை: குடிநீர் தொட்டியில் மலம்.. தீண்டாமையால் நடக்கும் கொடூரம்..! 

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் மீண்டும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீறியதாக  இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தாயூரில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பதாக வெளியான செய்தி தமிழகத்தையே உலுக்கியது.

இதே மாவட்டத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை ஜாதிப் பெயர் சொல்லி திட்டித் தாக்க முயன்ற தீண்டாமைக் கொடுமை சம்பவம் நடந்துள்ளது.

மங்களநாடு கிராமத்தில் டீக்கடைகளில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் புகார் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து மங்களநாடு பகுதியில் டீக்கடை நடத்தி வந்த வெங்கடாசலம், அருள்ராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Baskar

Next Post

#திருவள்ளூர்: திருமணம் ஆன பெண்ணை 18 வயது இளைஞன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம்..! 

Fri Jan 6 , 2023
திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள சியஞ்சேரியில் 18 வயது ஆட்டோ ஓட்டும் இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு காகலூரைச் சேர்ந்த 26 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் நெருக்கம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதைத்தொடர்ந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களான சதீஷ் மற்றும் சாம்ராஜ் […]
காதலனை பார்க்க வந்த சிறுமியை பதம்பார்த்த நண்பர்கள்..! வலுக்கட்டாயமாக மது ஊற்றி பலாத்காரம்..!

You May Like