கடந்த சில நாட்களாகவே பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். தற்போது ஈரோடு மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள், கட்சியில் இருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்ததால் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவை வலுப்படுத்த பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஆட்களை கொண்டுவர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் விலகி வருவதால் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சியில் உள்ளார்.