fbpx

வெடித்த வெடிகுண்டு சர்ச்சை..!! பாய்ந்தது முன்னாள் ராணுவ அதிகாரி மீது வழக்கு..!! அண்ணாமலை ஷாக்..!!

கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று திருவல்லிக்கேணியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற முன்னாள் ராணுவ அதிகாரி பாண்டியன், எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும், துப்பாக்கியால் சுடவும் தெரியும் என பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது. மேலும் அவர் பேசுகையில், ”உலகத்திலேயே மிகப்பெரிய ஒழுக்கமானது இந்திய ராணுவம், அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கு நல்லதல்ல. நாங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் ஒழுக்கமாக செய்பவர்கள். அப்படிப்பட்ட எங்களுக்கு பரிட்சை வைத்து பார்க்க நினைத்தால் நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது.

இங்கு அமர்ந்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குண்டு வைப்பதில் கெட்டிக்காரர்கள், சுடுவதில் கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள், எனவே எங்களை இதனை செய்ய வைத்து விடாதீர்கள்’ என கூறினார். இந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், ராணுவ அதிகாரி பாண்டியன் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாண்டியன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Chella

Next Post

அண்ணனும், தங்கையும்..!! இணையத்தில் வெளியான ஆபாச படம்..!! பழிவாங்க இப்படி ஒரு செயலா..?

Wed Feb 22 , 2023
டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச இணையதளங்களில் வெளிவந்துள்ளதாகவும், தனது சகோதரனுடன் இருக்கும் படங்களை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும், புதிய எண்களில் இருந்து தவறான செய்திகள் வருவதாவும் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். புகார் கொடுத்த பெண்ணின் மார்பிங் புகைப்படங்களை வெளியிட்ட நபர் யார் என […]

You May Like