fbpx

ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் மார்ச் 9 ஆம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.  தொடர்ந்து, ஜாபக் சாதிக்கின் கூட்டாளிகளான சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் ஜாபர் சாதிக்,  சதா,  முகேஷ்,  முஜிபுர் ரகுமான்,  அசோக் குமார் ஆகியோரின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில்,  டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று (ஏப்.02) ஆஜர்படுத்தப்பட்டனர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் இயக்குநர் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு என்சிபி அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய நிலையில்,  இன்று இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Post

IPL அட்டவணையில் திடீர் மாற்றம்..!! பிசிசிஐ வெளியிட்ட புதிய லிஸ்ட்..!!

Tue Apr 2 , 2024
கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் சீசன் 17 தொடங்கியது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 2) ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். முன்னதாக நடப்பு சீசனின் ஐ.பி.எல் அட்டவணை 15 நாட்களுக்கானது மட்டுமே வெளியானது. இந்தியாவில் தேர்தல் நடக்கும் என்கிற காரணத்தினால், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தேவைகளால், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை வெளியிட்ட […]

You May Like