அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில், தற்போது 12,000 பேர் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
![அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2020/06/school-teachers-1024x639.jpg)
அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் கையாளுகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு நடப்பு செப்டம்பர் மாதம் முதலே அமலுக்கு வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.