புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பொங்கல் பணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.500 ஏற்கனவே வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.250 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.
இந்த பரிசு தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகையை பெறுவதன் மூலம் புதுச்சேரியில் 1,30,791 குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.