fbpx

மிகக் கடுமையான வெப்ப நிலை..!! தமிழ்நாட்டிற்கு இன்றும் மஞ்சள் அலர்ட்..!! மதியம் யாரும் வெளிய போகாதீங்க..!!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திர காலத்திற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பல இடங்களில் கோடை வெயில் சதம் அடித்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதேபோல் உள் கர்நாடகா, தெலங்கானா, ராயலசீமா, உத்தரப்பிரதேசம், கடலோர ஆந்திரா மற்றும் ஏனம், மேற்கு வங்கம், சிக்கிம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் கடலோர ஒடிசாவின் ஒரு சில பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிகக் கடுமையான வெப்ப அலை வீச கூடும் என்று தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மேற்குவங்க மாநிலத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், ஒடிசா மாநிலத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! சென்னை விமான நிலையத்தில் வேலை..!!

Chella

Next Post

'என் தாயின் தாலி இந்த நாட்டுக்காக தியாகம் செய்யப்பட்டது'- பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி!

Wed Apr 24 , 2024
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில்,  காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதிலளித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில், பெங்களூரு ஊரகம் , வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பெங்களூரு, மாண்டியா, மைசூர் ஆகிய 6 இடங்களுக்கு மட்டும் வரும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையில் தேசிய கட்சித் தலைவர்கள் தீவிரம் காட்டி […]

You May Like