fbpx

பிரபல நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! என்ன வழக்கு தெரியுமா..?

நடிகையும் முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நடிகை ஜெயப்பிரதா, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பின்னர் இந்தி திரையுலகிலும் கொடி கட்டிப் பறந்தார். கடந்த 1994ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் ஜெயப்பிரதா. இவரது அரசியல் பயணம் தெலுங்குதேசம் கட்சியில் தொடங்கி உ.பியின் சமாஜ்வாதி கட்சி வரை நீடித்தது.

கடந்த 2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையே இவர், சென்னையில் புகழ்பெற்ற ஜெயபிரதா உள்ளிட்ட 2 தியேட்டர்களை நடத்தி வந்தார். இந்த தியேட்டர்களுக்கு முறையாக சொத்துவரி செலுத்தாததால், ஏற்கனவே திரையரங்கு பொருட்கள் அனைத்து ஜப்தி செய்யப்பட்டன.

இதேபோல், திரையரங்கு ஊழியர்களிடம் இஎஸ்ஐ செலுத்துவதற்கான பணத்தை ஜெயப்பிரதாவின் தியேட்டர் நிர்வாகம் பிடித்தம் செய்திருக்கிறது. ஆனால், இந்த பணத்தை முறையாக அரசு தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜெயப்பிரதா மீது அரசு தொழிலாளர் காப்பீட்டு கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் தற்போது அவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Chella

Next Post

செங்கல்பட்டு சாலை விபத்து… ரூ.2லட்சம் நிததியுதவி..! அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..

Fri Aug 11 , 2023
நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்துக்கெண்டே செல்கிறது. அந்த வகையில் இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மேலும் விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

You May Like